Wednesday 23 October 2013

காலத்தை கடக்கும் ஒருவன்



முடிவுறா காத்திருப்புகளின்
வெம்மையில்
அவனின்
மனச்சுவரின் பூச்சுகள்
உதிரத்தொடங்கிவிட்டன

தன் உதிரத்தின்
புளித்த சுவை
அவனுக்கு
இப்போது பிடிக்கவே இல்லை

முகத்தில் துப்பிச்சென்ற
உண்மைகள் அனைத்தையும்
நக்கி முடித்தாகிவிட்டது

மிடறு மிடறாய்
குடிக்க
வலியெதுவும்  புதிதாய் இல்லை

வாழ்தளற்ற வாழ்தலில்
நடுங்கி நடுங்கி
நீளம் கடக்க
இதோ நுழைகிறான்
நிச்சயமற்ற  இரவிற்குள்


--க.உதயகுமார்

No comments:

Post a Comment